கோயம்புத்தூர் மாவட்டம்
பள்ளபாளையம் வாசகர் வட்டம் 
நிர்வாகிகள்
தலைவர் :திரு.வே. விஸ்வபாரதி
துணைத்தலைவர் : திரு.ரவிக்குமார்
செயலாளர் : திருமதி.ஜானகிராம்
துணைச்செயலாளர்  : திரு.பிரவின்குமார்
இது ஒரு அரசியல் கட்சி சார்பற்ற பொது நல அமைப்பாகும். இந்த அமைப்பின் அடிப்படை நோக்கங்களையும் இலட்சியங்களையும் ஏற்றுக்கொள்பவர்கள் இவ்வமைப்பில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம்.
1. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நாட்டுப்பற்று மொழிப்பற்று மற்றும் சமூக உணர்வு ஏற்படப் பாடுபடுதல்.
2. இளைஞர்களைத் தன்னம்பிக்கைமிக்கவர்களாகவும், இடைவிடாது உழைத்து முன்னேறி அவரவர் துறையில் மிகச்சிறந்து விளங்கக் கூடியவர்களாகவும், தன்னலமற்ற தியாக உள்ளமும், சேவையுணர்வும் கொண்டவர்களாகவும் உருவாக்கப் பாடுபடுதல்.
3. நம் நாட்டின் பாரம்பாரியம் , பண்பாடு கலாச்சாரம், கலை இலக்கியம், வரலாறு முதலியவற்றை இளைய தலைமுறை முழுமையாக அறிந்து கொள்ளப் பாடுபடுதல்.

4. கடந்த கால இந்தியாவைப் படிப்போம், எதிர்கால இந்தியாவைப் படைப்போம் என்ற கோணத்தில் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வதோடு, இன்றைய தேசபக்தி எது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தப் பாடுபடுதல்
தொலை நோக்கு
நிறைந்த மக்களுக்கு குறைந்த செலவில் சிறந்த படிப்பு. 

இலக்கு
பொது நூலக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவது.
தமிழ் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இதோ ஒர் அரிய வாய்ப்பு! வாசகர் வட்டம் 
உங்களை வரவேற்க்கக் காத்திருக்கிறது. புத்தகம் பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொள்ள அனைவரும் வாருங்கள். 
வாசகர் வட்டத்தின் நோக்கங்கள்
  • நூலகங்களின் பயன்பாட்டை முழுமையாக்குதல்
  • நூலக நட்பு மனப்பான்மையை உண்டாக்குதல்
  • நூல்களை வாசிக்கவும், நேசிக்கவும் செய்தல்
  • நூலக வளர்ச்சிக்கான செயல்களில் ஈடுபடுதல்
  • நூல்கள் அறிமுகம், எழுத்தாளர் அறிமுகம் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல்
  • தேவைக்கேற்ப புதிய நூலகங்கள் அமைக்க முயற்சி செய்தல்
  • பல்வேறு திட்டங்களின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துதல்